மீனவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மீனவரின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சாலை மறியல் செய்தனர்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் நான்கு உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் இருந்து கப்பல் மூலம் கோட்டைப்பட்டினத்துக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக உயிரிழந்த மீனவர்களின் சொந்த ஊர்களான தங்கச்சிமடத்துக்கு மெசியாவின் உடலும், மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமுக்கு சாம்சன் டார்வினின் உடலும், வட்டான்வலசை கிராமத்துக்கு நாகராஜின் உடலும், தாத்தனேந்தல் கிராமத்துக்கு செந்தில்குமாரின் உடலும் கொண்டு செல்லப்பட்டது.

இதில் தங்கச்சிமடத்துக்கு மீனவர் மெசியாவின் உடல் கொண்டு வரப் பட்டபோது அவரது மரணத்தில் சந் தேகம் இருப்பதால் உடலை உறவினர் களிடம் காட்ட வேண்டும், மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் நேற்று மாலை சாலை மறியல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

59 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்