முதுமலை புலிகள் காப்பக பணியாளர்களுக்கு பயிற்சி

By செய்திப்பிரிவு

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வனத் துறை பணியாளர்களுக்கு ஆபத்துக் காலங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழ்நாடு வனத் துறையின் கீழ் இயங்கும் நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு, உதவி வனப் பாதுகாவலர் மகேந்திரன் தலைமை வகித்து செயல்முறை விளக்கமும், பயிற்சியும் அளித்தார்.

பணியாளர்கள் வனத்தில் ரோந்து செல்லும்போது, காட்டுத் தீயினால் ஏற்படும் திடீர் அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி, அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லுதல், வனக் குற்றங்களைத் தடுத்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டன. தெப்பக்காடு முகாமில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் வனச் சரக அலுவலர்கள், வனவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

49 mins ago

விளையாட்டு

44 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்