நாராயணசாமி வேண்டுகோளை ஏற்க மறுப்பு சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமி 4-வது நாளாக போராட்டம்

By செய்திப்பிரிவு

முதல்வர் நாராயணசாமி வேண்டு கோளை ஏற்க மறுத்து, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமி நான்காவது நாளாக நேற்றும் தனது போராட் டத்தை தொடர்ந்தார்.

புதுவை சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி தனது துறையின் கீழ் 15 கோரிக்கைகளுக்கு ஆளுநர் கிரண்பேடி உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி முதல் சட்டப்பேரவை வளாகத்தில் அமர்ந்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். சட்டப்பேரவை வளாக வராண்டாவில் படுத்து உறங்கி, தனது அறையிலேயே குளித்து, உணவருந்தி போராட் டத்தை தொடர்ந்து வருகிறார்.

முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் துறை சம்பந்தமான கோப்புகள் ஆய்வில் உள்ளதால் போராட்டத்தை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்க மறுத்த அமைச்சர் கந்தசாமி தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். அமைச்சருக்கு ஆதரவாக காங்கிரஸ், கூட்டணிக் கட்சியினர் எம்எல்ஏக்கள் என பலரும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்