மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன்கள்

By செய்திப்பிரிவு

ஸ்மார்ட் செல்போன்கள் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுக்கு மேற்பட்ட உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள், வேலையில்லாத பட்டதாரி மாணவ, மாணவிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் காதுகேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன்கள் வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஸ்மார்ட் செல்போன்கள் பெற மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், கல்வி படிப்பதற்கான சான்று, பணி சான்று, சுய தொழில் புரிவதற்கான சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டைநகல் மற்றும் ஒரு பாஸ்போர்ட்அளவு புகைப்படத்துடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 23-ல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

உலகம்

12 mins ago

ஆன்மிகம்

10 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்