கரூர்: கரூர் மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா கரூர் சிஎஸ்ஐ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. திமுக மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கினார். திமுக சட்டத் துறை இணைச் செயலயாளர் வழக்கறிஞர் என்.மணிராஜ், திமுக நகரச் செயலாளர்கள் கணேசன், வழக்கறிஞர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது, கரூர் மாவட்ட திமுக மற்றும் செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில் வரும் கல்வியாண்டு முதல் ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தைகளில் பள்ளியில் பயில்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000, கல்லூரியில் படிப்பவர்களுக்கு ரூ.10,000 கல்விக் கட்டணமாக வழங்கப்படும். மேலும், ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பூ வியாபாரம் உள்ளிட்ட சிறு தொழில் செய்பவர்கள் குழந்தைகள் கல்வி பெறவும் உதவி செய்யப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
இந்தியா
11 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago