புதுச்சேரி அருகே ரவுடி கும்பலால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரி மாநிலம் தவளக் குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் திடீர் நகரைச் சேர்ந்தவர் விஜயன் (எ) விஜய் (25). கடந்த மாதம் 31-ம் தேதி இரவு இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் புகழேந்தி உள்ளிட்ட சிலருடன் பூரணாங்குப்பம் சாலையில் நின்றுபேசிக் கொண்டிருந்தார். அப் போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த குமரவேல், ராஜசேகர் உள்ளிட்ட கும்பல் முன்விரோதம் காரணமாக புகழேந்தியை தாக்கியது. இதனை விஜயன் தடுத் ததால் அவரையும் அக்கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த விஜ யனை அருகிலிருந்தவர்கள் மீட்டுபுதுச்சேரி அரசு பொது மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து குமரவேல், ராஜசேகர், பிரவீன், சபரி, அருணாசலம், ரவீந்திரன் ஆகிய 6 பேரை கைது செய் தனர். அவர்களிடமிருந்து 3 கார் கள், 4 பைக்குகள், 2 கத்தி உள் ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயன் நேற்று முன்தினம் நள்ளிரவில் உயிரிழந்தார். இதையடுத்து தவளக்குப்பம் போலீஸார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட குமரவேல், ராஜசேகர் மீது இரட்டை கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சை பெற்றுவந்த விஜயன் உயிரிழந்தார். தவளக்குப்பம் போலீஸார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago