சிவகங்கை மாவட்டம், இளையான் குடி அருகே மினி கிளினிக் திறப்பு விழாவின்போது திடீரென மின் தடை ஏற்பட்டது. காத்திருந்தும் மின்சாரம் வராததால் செல் போன் டார்ச் வெளிச்சத்தில் அமைச்சர் ஜி.விஜயபாஸ்கரன் பேசினார்.
இளையான்குடி அருகே விசவனூரில் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். கதர் கிராமத் தொழில்கள் நலவாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார். பிறகு மாவட்ட ஆட்சியர், நாகராஜன் எம்எல்ஏ பேசினர்.
தொடர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மைக் வேலை செய்யவில்லை. 10 நிமிடம் காத்திருந்தும் மின்சாரம் வராத தால் மொபைல்போன் டார்ச் வெளிச்சத்தில் அமைச்சர் பேசினார். சுமார் 20 நிமிடம் அமைச்சர் பேசும் வரை மின்சாரம் வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 mins ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago