கரோனா தொற்றுக்கு 40 பேர் பாதிப்பு

By செய்திப்பிரிவு

வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை/தி.மலை: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று புதிதாக 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,874-ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,473 -ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 15,481- ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,181-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 18,824 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 74 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 283 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

8 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

6 mins ago

சினிமா

24 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

18 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

32 mins ago

வலைஞர் பக்கம்

36 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

46 mins ago

மேலும்