விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்கள் இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர் பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய விமானப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் புதுச்சேரி மாநிலம் இந்திராகாந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் டிசம்பர் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முகாமில் புதுச்சேரி, தமிழ்நாடு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த, 17 முதல் 21 வயது கொண்ட ஆண்கள் மட்டும் கலந்துக்கொள்ள, www.airmenselection.cdac.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (28-ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும். 10-ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்களும், டிப்ளமோ முடித்தவர்களும், கல்லுாரியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிப்பவர்களும் விண்ணப் பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தினை 94990 55946 என்கிற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்