திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு மேலத் தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜலீல் (58). கட்டிமேடு ஆதிரங்கம் ஜமாத்தின் முன்னாள் தலைவர். அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர், மனைவியுடன் கோவையில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 27 பவுன் நகைகள், ரூ.5.80 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
17 mins ago
க்ரைம்
34 mins ago
இந்தியா
44 mins ago
விளையாட்டு
33 mins ago
இந்தியா
49 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
10 hours ago