திருவண்ணாமலை: வந்தவாசி அருகே சாலையை சீரமைக்காததைக் கண்டித்து,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்க்கொவளைவேடு கிராமத்தில் உள்ள கங்கையம்மன் வீதியில் புதிய சாலை அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஏற்கெனவே இருந்த சாலை பெயர்க்கப்பட்டது. அதன்பிறகு பணிகள் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால், அந்த வீதியில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து வந்தவாசி - ஆரணி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி மற்றும் வந்தவாசி வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
5 mins ago
வலைஞர் பக்கம்
9 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
19 mins ago
இந்தியா
27 mins ago
க்ரைம்
24 mins ago
இந்தியா
30 mins ago
தமிழகம்
52 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago