புதுச்சேரி அய்யங்குட்டிபாளை யம் சிவசக்தி நகர், அமைதி நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் ஜெயபிரகாஷ் (27). இவர் குருமாம் பேட் வழுதாவூர் சாலையில் உள்ளஒரு பெட்ரோல் பங்கில் ஊழி யராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த ஜெயபிரகாஷை 4 பேர் கும்பல் சரமாரியாக தாக்கி பைக்கில் கடத்திச் சென்றது. மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜெய பிரகாஷை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அய்யங் குட்டிபாளையத்தில் இருந்து அரசூர்-பொறையூர் செல்லும் சாலையில் ஒரு காலிமனையில் சேற்றில் புதைந்த நிலையில் ரத்த காயங்களுடன் ஜெயபிரகாஷ் இறந்து கிடந்தார்.
விசாரணையில், ஜெயபிரகாஷூக்கும், சண்முகாபுரத்தைச் சேர்ந்த சபரி என்பவருக்கும் மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்தது.
இதனால் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதை யடுத்து மேட்டுப்பாளையம் போலீஸார், சண்முகாபுரம் சபரி நாதன், டெம்போ ராஜா, எலி கார்த்திக், மார்த்தான் ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
58 mins ago
க்ரைம்
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago