தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(51). இவர் மீது திருச்சி, மணப்பாறை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடியதாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டபோது, இவரிடமிருந்து 70 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு முசிறி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், வழக்கு தொடர்பாக நாகை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ராஜ்குமாரை நேற்று முன்தினம் ஆஜர்படுத்திய போலீஸார், பின்னர் முசிறிக்கு அழைத்துச் செல்வதற்காக பேருந்தில் புறப்பட்டனர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி, திருச்சி செல்லும் பேருந்தில் ஏறுவதற்கு முன் சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறிய ராஜ்குமார், போலீஸாரிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
43 mins ago
வலைஞர் பக்கம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
52 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago