ஆம்பூர்: விஜயபாரத மக்கள் கட்சி சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தி விழா ஆம்பூரில் நேற்று கொண்டாடப்பட்டது.
ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற ஜெயந்தி விழாவுக்கு விஜயபாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.
பாஜக மூத்த நிர்வாகி சிவப்பிரகாசம், நகர பொறுப்பாளர் பிரபு, ஆர்எஸ்எஸ் மாவட்ட பொறுப்பாளர் ஜெயவேல் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், விஜயபாரத மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் கோபி, நிர்வாகிகள் லோகநாதன், வெங்கடேஷ், ஆர்எஸ்எஸ் நகர பொறுப்பாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago