ஆய்க்குடியில் 101 மி.மீ. மழை :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 40 மி.மீ. மழை பெய்தது. இதுபோல சேரன்மகாதேவியில் 5.8 மி.மீ, பாபநாசம் அணைப்பகுதியில் 8 மி.மீ., சேர்வலாறு அணையில் 6 மி.மீ., நம்பியாறு அணையில் 27 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 136.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,159 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 648 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 117.15 அடியாக இருந்தது. அணைக்கு 613 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் நிரம்பியிருப்பதை அடுத்து இந்த அணைகளுக்கு உள்வரத்தாக வரும் தண்ணீர் உபரியாக திறந்துவிடப்படுகிறது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான வெயில் இருந்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடியில் 101 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணையில் 70 மி.மீ., தென்காசியில் 51.40 மி.மீ., செங்கோட்டையில் 49 மி.மீ., கடனாநதி அணையில் 42 மி.மீ., ராமநதி அணையில் 5 மி.மீ., சங்கரன்கோவிலில் 4.40 மி.மீ. கருப்பாநதி அணையில் 1 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் நிரம்பிவிட்டதால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படு கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

48 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்