கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள கொள்ளுத்தண்ணிப்பட்டியைச் சேர்ந்தவர் அங்கமுத்து(45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா(37). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சிந்தாமணிப்பட்டிக்கு நேற்று கூலி வேலைக்குச் சென்ற அங்கமுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மரக்கிளையை வெட்டியபோது, உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அங்கமுத்து ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித் தனர். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அங்கமுத்து உயிரிழந்ததை அறிந்த அவரது மனைவி கவிதாவுக்கு அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago