ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியில் ஏ.டி.எம் மையத்தில் நடைபெற்ற திருட்டு முயற்சி குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தனியார் வங்கி சேவை மையத்தின் ஏ.டி.எம் மையம் உள்ளது.
இந்த மையத்தில் ஏ.டி.எம்இயந்திரம் உடைக்கப்பட் டுள்ளதை பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில், ஆம்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் கிராமிய காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை செய்தனர்.
ஏ.டி.எம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள் பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியாமல் தப்பியுள்ளனர். இதையடுத்து, அந்த மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ஏ.டி.எம் மையத்தில் நடைபெற்ற திருட்டு முயற்சி குறித்து மேலாளர் ராஜேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
46 mins ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
5 hours ago