புதுச்சேரி பால் வியாபாரி வீட்டில் 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு :

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் பால் வியாபாரியின் பூட்டிய வீட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் சிவகாமி நகர் 3 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிளமென்ட் (48). பால் வியாபாரி. இவர், தனது உறவினர் ஒருவரை வெளிநாட்டுக்கு வழியனுப்புவதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

நேற்று காலையில் வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

அதிர்ச்சியடைந்த கிளமென்ட் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

வணிகம்

30 mins ago

இந்தியா

32 mins ago

சினிமா

38 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்