பொள்ளாச்சி: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சேடல் அணைப்பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த 6 காட்டு யானைகள், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஜன்னல், கதவுகளை உடைத்து, உள்ளே இருந்த தொலைக்காட்சி பெட்டியை தும்பிக்கையால் வெளியே இழுத்து வீசி சேதப்படுத்தின. அதைத்தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தின் கதவு, ஜன்னல்களை உடைத்து உள்ளே வைத்திருந்த 25 கிலோ எடையுள்ள 20-க்கும் மேற்பட்ட சத்துமாவு மூட்டைகளை வெளியே இழுத்து போட்டு சேதப்படுத்தின. மையத்திலுள்ள எடை போடும் எந்திரத்தை காலால் மிதித்து உடைத்தன. சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் காட்டு யானைகளை விரட்டினர். இதுபற்றி அங்கன்வாடி மைய பணியாளர் உஷா கூறும்போது, “இந்த அங்கன்வாடி மையத்தின் மூலம் தான் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 9 அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சத்துமாவு மூட்டைகள் அனைத்தையும் யானைகள் சேதப்படுத்திவிட்டன” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
க்ரைம்
13 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
37 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
4 hours ago