பாலியல் வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டு சிறை :

By செய்திப்பிரிவு

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்செங்கோடு அருகே உள்ள சூரியகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தங்கராசு (33). இவர் 17 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த புகாரின்பேரில் தங்கராசுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று அவ்வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் தங்கராசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்