கானாற்று வெள்ளத்தில் சிக்கிய வியாபாரி உடல் கரை ஒதுங்கியது :

By செய்திப்பிரிவு

ஆம்பூர் அருகே கானாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவரின் உடல் 4 நாட்களுக்கு பிறகு நேற்று கண்டெடுக்கப்பட்டது.

ஆம்பூர் டவுன் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன்(52). இவர், ரயில்களில் முறுக்கு விற்பனை செய்து வந்தார். கடந்த 19-ம் தேதி ஆம்பூர் நடராஜபுரம் செல்லும் வழியில் உள்ள கானாறு தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்றபோது மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், ஆம்பூர் ஏ-கஸ்பா சிவராஜபுரம் பகுதியில் உள்ள கானாறு தரைப்பாலம் அருகே ஆண் உடல் ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. தகவலின்பேரில் ஆம்பூர் நகர காவல் துறையினர் அங்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கானாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தது, நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி குபேந்திரன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 secs ago

தமிழகம்

11 mins ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

22 mins ago

வாழ்வியல்

13 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

48 mins ago

சினிமா

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்