பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்டது செட்டிபாளையம் கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அகல ரயில் பாதையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. சிறிய மழை பெய்தாலும், சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம் போல தேங்கி விடுகிறது. இதை கடந்து செல்லும் இருசக்கர வாகனங்களின் இன்ஜின்களில் நீர் புகுந்து பழுதுபட்டு நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சுமார் 3 அடி உயரத்துக்கும் 40 அடி நீளத்துக்கும் சேறும் சகதியுமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நம்பியமுத்தூர், தேவநல்லூர், தென்குமாரபாளையம், சிஞ்சுவாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கோலார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், உடுமலை, பொள்ளாச்சி நகரப்பகுதிகளுக்கும் வரமுடியாமல் தவிக்கின்றனர். கழிவுநீர் அகற்றும் வாகனம் மூலம் சுரங்கத்தின் கீழ் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
13 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
சுற்றுலா
6 hours ago