திம்பம் மலைப்பாதையில் அரசுப் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகும். சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து 22-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, எதிரே வந்த சரக்கு லாரி மோதி நேற்று காலை விபத்துக்குள்ளானது. இதில் அரசுப் பேருந்தின் கண்ணாடி மற்றும் வலதுபுறம் இடிபாடுகளுக்குள் சிக்கியது. இதில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இடிபாடுகளுக்குள் சிக்கிய பேருந்தை மீட்க இரண்டு மணி நேரம் ஆனதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆசனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
3 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
இந்தியா
6 hours ago
ஜோதிடம்
6 hours ago