விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் தங்க நகை, பணம் திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த சத்திரம்புதூர் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி சேட்டு (28). இவர், தனது விவசாய நிலத்தில் நடந்து வரும் அறுவடை பணிகளை கவனிக்க வீட்டை பூட்டிக்கொண்டு மனைவியுடன் சென்றார். அறுவடை முடிந்து இரவு 7 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பின்னர், உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.18 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் சேட்டு புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்