திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அணைகள் மற்றும் பூங்காக்களை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அணைகளை பார்வையிடவும், நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் கடந்த ஆகஸ்ட் மாதம் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு 3-வது மாதங்களாக தொடர்கிறது.
இதுகுறித்து ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பொழுதுபோக்கு பூங்காக்கள், அணைகள் மற்றும் நீச்சல் குளங்களை மக்கள் பயன்படுத்த அக்டோபர் 17-ம் தேதி வரை விதிக்கப்பட்ட தடை உத்தரவு, வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
29 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
3 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
3 hours ago