மதுரை எல்லீஸ்நகர் மேம்பாலத்தின் மையப் பகுதியிலுள்ள பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், தகவல் அறிந்த பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அந்த இளைஞரிடம் பேசி, அவரை கீழே இறங்கச் செய்து மீட்டனர். எஸ்.எஸ்.காலனி போலீஸாரின் விசாரணையில், தற்கொலைக்கு முயன்றவர் எல்லீஸ்நகர் கார்ப்பரேஷன் காலனியைச் சேர்ந்த லெனின்குமார் (20) என்பது தெரிய வந்தது. காதல்திருமணம் செய்துகொண்ட இவரது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்க்க, மனைவி வீட்டார் தடுப்பதால் லெனின் தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
4 hours ago