சேலம்: எடப்பாடி அருகே நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில், அவரது மனைவி மற்றும் ஆண் நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
எடப்பாடி அடுத்த தேவூர் புள்ளாக்கவுண்டம்பட்டி 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர் தயானந்த் (30). இவர் கடந்த 11-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக தயானந்தின் தாய் கஸ்தூரி தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தேவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தேவூர் போலீஸார் தாயனந்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், தேவூர் அருகே உள்ள தண்ணீர்தாசனூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (21) என்பவர் தயானந்திடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். பணம் கொடுக்க தயானந்த் வீட்டுக்கு முருகன் வந்தபோது, தயானந்தின் மனைவி அன்னபிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருங்கி பழகிய நிலையில், அன்னபிரியா தனது ஆண் நண்பர் முருகனை வீட்டுக்கு வரவழைத்து கட்டையால் தயானந்தை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அன்னபிரியா மற்றும் முருகனை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
வணிகம்
32 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago