புதுவையில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

புதுவையில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பேர் உயிரிழந்தனர். புதுவையில் நேற்று 3,022 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் தற்போது 639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 59 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 2 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 1,848 ஆக உயர்ந்துள்ளது. புதுவை மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 53 ஆயிரத்து 18 பேர் தடுப்பூசி (2-வது தவணை உட்பட) போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்