திருச்சியில் அக்.6-ல் அஞ்சல் சேவை குறைதீர் முகாம் :

By செய்திப்பிரிவு

திருச்சியில் அக்.6-ம் தேதி மண்டல அளவில் அஞ்சல் சேவை குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக அஞ்சல் துறை மத்திய மண்டலத் தலைவர் அ.கோவிந்தராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் உள்ள மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில், அக்.6-ம் தேதி காலை 11 மணியளவில் மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. எனவே, அஞ்சல் சேவை தொடர்பான குறைகளை செப்.30-ம் தேதிக்குள் அனுப்பலாம்.

கோட்ட அளவில் ஏற்கெனவே புகார் மனு கொடுத்து, கிடைக்கப் பெற்ற பதிலில் திருப்தி அடையாதவர்கள் மட்டுமே இந்த குறைதீர் முகாமுக்கு குறைகளை அனுப்பி வைக்க வேண்டும்.

குறைகளை ‘நா.ராஜகோபாலன், உதவி இயக்குநர் (காப்பீடு மற்றும் புகார்), அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி-1’ என்ற முகவரிக்கு அஞ்சல் உறையின் முன்பக்க மேற்பகுதியில் ‘அஞ்சல் சேவை குறைதீர் முகாம்- செப்டம்பர் 2021’ என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

மேலும் கரோனா பரவாமல் தடுக்கும் நோக்கில் அஞ்சல் சேவை குறைதீர் முகாமை கூகுள் மீட் அழைப்பு மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தங்களின் தற்போதைய முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அருகிலுள்ள அஞ்சலக முகவரி ஆகியவற்றையும் தவறாமல் குறிப்பிட்டு அனுப்பவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

36 mins ago

உலகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்