தேசிய திறனறித் தேர்வில் தேர்வு பெற்ற புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு வழங்கினார்.
மாணவர்களின் திறனைக் கண்டறியும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாநில மற்றும் தேசிய அளவில் திறனறித் தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட திறனறித் தேர்வில் மாநில அளவில் தேர்வு பெற்ற 20 மாணவர்களுக்கு தலா ரூ.5000, தேசிய அளவில் தேர்வு பெற்ற மூன்று மாணவ மாணவியருக்கு தலா ரூ.10,000-க்கான தொகை காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதுவை கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்வித்துறையின் இயக்குநர் ருத்ரகவுடு மற்றும் இணை இயக்குநர் சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தேர்வுப் பிரிவு பொறுப்பு துணை முதல்வர் பூபதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
4 hours ago
வணிகம்
11 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
சுற்றுலா
4 hours ago
கல்வி
4 hours ago