திருச்செங்கோடு வேளாண் விற்பனை நிலையத்தில் 1,700 மூட்டை மஞ்சள் ரூ.75 லட்சம் மதிப்பில் ஏலம் எடுக்கப்பட்டது.
திருச்செங்கோடு வேளாண்மை விற்பனை நிலையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறுவது வழக்கம். சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் மஞ்சளை, இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மஞ்சளை சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் எடுத்துச் செல்கின்றனர்.
இதன்படி நேற்று முன்தினம் திருச்செங்கோடு வேளாண் விற்பனை நிலையத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. அதில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.6,902 முதல் ரூ.8,259 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.6,399 முதல் ரூ.7,501 வரையும், பனங்காளி மஞ்சள் ரூ.15,009 முதல் ரூ.19,500 வரை என மொத்தம் 1,700 மூட்டை மஞ்சள் ரூ.75 லட்சம் மதிப்பில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
12 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago