கடலூர் வரக்கால்பட்டில் விவசாயி களுக்கு அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து ஒரு நாள் சிறப்பு பயிற்சி நேற்று நடைபெற்றது.
இயற்கை விவசாய இடுபொ ருட்கள் கையேட்டினை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர்பேசியது: ரசாயன உரங்களை கட்டுபாடின்றி தொடர்ந்து பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நன்மை தரக்கூடிய நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் ஆகியன அழிவதுடன் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து பூச்சி விரட்டிகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை விவசாயிகள் தாமாகவே தயாரித்து பயன்படுத்துவதால் நல்ல பலன் ஏற்படுவதை கண்கூடாக தெரிந்துள்ளனர் என்றார்.
நிகழ்வில் வேளாண் இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) ஜெயக் குமார்,கடலூர் வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
வணிகம்
31 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
55 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago