நாட்றாம்பள்ளியில் குடிநீர் வழங்கக்கோரி - பேரூராட்சி அலுவலகம் முற்றுகை :

By செய்திப்பிரிவு

சீரான குடிநீர் வழங்கக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கோடி சாமுடி தெருவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி அலுவ லகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘சாமுடி தெருவில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பேரூராட்சி சார்பில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரம் கூட குடிநீர் வருவதில்லை, இது போதுமானதாக இல்லை. எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் ஆழ்துளைக் கிணறுகள் செய லற்று கிடக்கின்றன.

அதேபோல, கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் டேங்க் சேதமடைந்து விட்டதால் அதிலும் தண்ணீர் வருவதில்லை. இதையெல்லாம் சரி செய்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் நட வடிக்கை இல்லை. இதைக்கண் டித்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த பேரூராட்சி அலுவலர்கள் ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்தவும், பழுதடைந்த சின்டெக்ஸ் டேங்குகளை சரி செய்துத்தர விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

35 mins ago

வாழ்வியல்

26 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்