அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான முகவர்கள் பணிக்கு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர வடக்கு கோட்டத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் தேர்வுநடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 50 வரை இருக்க வேண்டும்.
சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீடு முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ‘முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை நகர வடக்கு கோட்டம், சென்னை - 600008’ என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ, sreeanrindiapost@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 10-ம் தேதி. நேர்காணல் நடைபெறும் தேதி விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
சென்னை நகர வடக்கு கோட்டத்தின் முதுநிலை அஞ்சல்கண்காணிப்பாளர் அலுவலகத்தை 044 - 28273637 என்ற தொலைபேசி எண் அல்லது sreeanrindiapost@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு கூடுதல்விவரங்களை அறிந்துகொள்ளலாம் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
தமிழகம்
19 mins ago
இந்தியா
43 mins ago
இந்தியா
30 mins ago
இந்தியா
53 mins ago
விளையாட்டு
45 mins ago
இந்தியா
53 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago