தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி - மதுரை, திண்டுக்கல்லில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றாத திமுக தலைமையிலான அரசை கண்டித்து மதுரை, திண்டுக்கல், தேனியில் அதிமுக வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பனகல் சாலையில் ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்டச் செய லாளர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். புற நகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பசுமலையில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட் டங்கள் நடந்தன.

திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முன்னாள் மேயர் வி.மருதராஜ் உள்ளிட்டோர் கருப்புச்சட்டை அணிந்து பங்கேற் றனர்.

நத்தம் அருகே வேம்பார்பட்டி யில் நத்தம் ஆர்.விசுவநாதன் எம்.எல்.ஏ. தனது வீட்டின் முன் நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் நகரில் உள்ள 48 வார்டுகளிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி எம்.பி ரவீந்திரநாத் தலைமையில் பெரியகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிமுக நகரச் செயலாளர் ராதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

விளையாட்டு

11 mins ago

இணைப்பிதழ்கள்

37 mins ago

தமிழகம்

47 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்