வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவி த்தார்.
மதுரை ஆட்சியர் அலுவ லகத்தில் மதுரை, தேனி, திண்டு க்கல், மாவட்டங்களின் வருவாய்த் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
கூட்டத்துக்குப் பின்பு செய் தியாளர்களிடம் அமைச்சர் கூறி யதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளி யாகும். வருவாய்த் துறை அலுவலர்களுக்கு நிலுவையில் உள்ள பதவி உயர்வும் விரைவில் வழங்கப்படும். மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தத் தேவையான நிதி ஒதுக்கும் அரசாணை ஓரிரு நாளில் வெளியாகும். அதன் பின்னர் நில எடுப்புப் பணிகள் விரைவுபடுத்தப்படும். என்றார்.
முன்னதாக, ரூ.14.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி களை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, பழனி வேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், 3 மாவட்ட எம்எல்ஏக்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் குமார் ஜெயந்த், நில நிர்வாக ஆணையர் நாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
37 secs ago
சினிமா
5 mins ago
இந்தியா
13 mins ago
க்ரைம்
10 mins ago
இந்தியா
16 mins ago
தமிழகம்
38 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago