விழுப்புரம் புதிய பேருந்து நிலைய கழிவறையில் மாவட்ட ஆட்சியர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் ஆட்சியர் மோகன் நேற்று காலை விழுப்புரம் நகராட்சியில் ஆய்வு செய்ய புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் அருகே குமாரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கோரிக்கை மனு ஒன்றை ஆட்சியரிடம் அளித்தார். அம்மனுவில், "விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டண கழிவறை செயல்பட்டுவருகிறது. இங்கு சிறுநீர் கழிக்க 50 பைசாவும், மலம் கழிக்க ரூ.1 வசூலிக்கவேண்டும். கட்டண விதியை மீறி சிறுநீர் கழிக்க ரூ.5, மலம் கழிக்க ரூ.10 கேட்டு பொதுமக்களை மிரட்டுகின்றனர். பொதுமக்களில் ஒருவரான என் அவசர நிலையை புரிந்துகொண்டு எனக்கு காலைக்கடன் கழிக்க ரூ. 9 கடன் உதவி வழங்கவேண்டும். இக்கடனை வரும் 1-ம் தேதி திரும்ப செலுத்திவிடுகிறேன். மேலும் பொதுமக்களை மிரட்டும் கட்டண கழிவறை ஒப்பந்தத்தை ரத்து செய்து அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து மனு அளித்த பிரகாஷை அழைத்துக்கொண்டு கட்டண கழிவறைக்கு சென்று ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நடந்தவை பற்றி பிரகாஷிடம் கேட்டபோது அவர் கூறியது: அக்கட்டண கழிவறைக்கு சென்று அங்கு இருந்தவர்களிடம் கட்டண விவரங்களை ஆட்சியர் கேட்டார். அவர்கள், கட்டண விதிப்படி கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்தனர். அப்போது கழிவறையிலிருந்து வெளியே வந்தவரிடம் கேட்டபோது நான் தெரிவித்த கட்டணம் வசூலிப்பது உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து உடன் வந்தி ருந்த நகராட்சி ஆணையர் தட்சணா மூர்த்தியிடம், இங்கு எழுதப்பட்ட டோல் ஃபிரி எண்ணுக்கு பதில் உங்கள் மொபைல் எண்ணை எழு துங்கள். யார் போன் செய்தாலும் எடுத்து பேசுங்கள் என்று தெரிவித்தார். மேலும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார் என்று தெரிவித்தார். ஆனால் நேற்று மாலைவரை அக்கட்டண கழிவறையில் நகராட்சி ஆணையரின் மொபைல் எண்ணை எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுநீர் கழிக்க ரூ.5, மலம் கழிக்க ரூ.10 கேட்டு பொதுமக்களை மிரட்டுகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago