சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தங்கள் கோரப்படும்போது அதற்கான முன்வைப்பு தொகையை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணலி மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்த பணிக்காக ஆன்லைனில் ஒப்பந்தம் கோரப்பட்டு முன்வைப்பு தொகையும் ஆன்லைனில் பெறப்பட்டது. இதற்கிடையே குறிப்பிட்ட ஒப்பந்த பணிக்கான முன்வைப்பு தொகையை நேரடியாக மண்டலத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தும் வகையில் தொடர்புடைய செயற்பொறியாளர் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்த புகார்கள் மாநகராட்சியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணலி மண்டல செயற்பொறியாளரை கட்டாய காத்திருப்பில் வைக்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். மேலும், மணலி மண்டலத்தில் கோரப்பட்ட குறிப்பிட்ட அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
51 mins ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
3 hours ago
உலகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
வேலை வாய்ப்பு
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
கல்வி
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago