அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர்(பொ) ஐயப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கட்டிட அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணு வியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கனிணி பொறியியல் ஆகிய 5 படிப்புகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த 5 படிப்புகளும் மொத்தம் 300 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர்.கல்விக்கட்டணம் ஓராண்டுக்கு ரூ.2,452 மட்டுமே.
வழக்கமாக, பத்தாம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இனசுழற்சி முறையில் கலந்தாய்வு வாயிலாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். தற்போது மாணவர் சேர்க்கை 9-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்."www.tngptc.in" அல்லது "www. tngptc.com" ஆகிய இணையதளங்கள் வழியாக வரும் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்கு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் உள்ளது. அங்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9442736992, 9585299529, 8098735554 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago