இதுதொடர்பாக, மாநகர காவல் உயரதிகாரி கூறும்போது,‘‘மாநகரில் ரோந்து பணிக்காக 24 ஜீப், 42 பைக்குகள் உள்ளன. அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் தகவல் தொடர்பான இடம், மாநகரின் உட்பகுதி என்றால் 5 முதல் 7 நிமிடங்களுக்குள்ளும், புறநகரை ஒட்டிய மாநகர் பகுதி என்றால் 10 நிமிடங்களுக்குள்ளும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
அவசரகால அழைப்புகள் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர்கள் ஆய்வு செய்து, தர மதிப்பீடு வழங்குகின்றனர். அதன்படி, மற்ற மாநகரங்களைக் காட்டிலும், உடனடி நடவடிக்கை எடுப்பதில் கோவை மாநகர காவல்துறை தரவரிசையில் முன்னிலையில் உள்ளது. மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வாராந்திர நாட்களில் தினமும் 75 அழைப்புகளும், வார இறுதி நாட்களில் கூடுதல் அழைப்புகளும் கிடைக்கப் பெறுகின்றன’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஆன்மிகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago