நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ஆலாம்பட்டி மயான வளாகத்தில் விளையாட்டுத் திடல் அமைக்க, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:
ஆலாம்பட்டி ஊராட்சியில் அரசு புறம்போக்கு இடத்தில் குழந்தைகள் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டது. தற்போது விளையாட்டு உபகரணங்கள் எதுவும் இல்லை. இதுதொடர்பாக வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆலாம்பட்டி, அத்தனூர் பகுதி மக்கள் பயன்படுத்தும் மயானத்தில் விளையாட்டுத் திடல் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் விளையாட்டுத் திடல் அமைப்பது பயனற்றது. எனவே, மீண்டும் பழைய விளையாட்டுத் திடலை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
55 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago