புதுச்சேரியில் புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 4,214 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 63, காரைக்காலில் 6, ஏனாமில் ஒருவர், மாஹேயில் 11 என மொத்தம் 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 171 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 97.3 சதவீதத்தினர் குணமடைந்தனர். மேலும் புதுச்சேரி, காரைக்காலில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 85, கதிர்காமம் கரோனா மருத்துவமனையில் 54, கோவிட் கேர் சென்டர்களில் 24 என 246 பேர் மருத்துவமனைகளிலும், 1,167 பேர் வீட்டு தனிமையிலும் என 1,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் 5 லட்சத்து 92 ஆயிரம் பேர் இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago