காரியாபட்டி அருகே செவிலியர் மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தீக்குளிப்பு :

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே செவிலியர் பயிற்சி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றார்.

காரியாபட்டி அருகே உள்ள தோணுகால் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மகள் வேளாங்கண்ணி (21). விருதுநகர் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இடுப்பு வலியால் சிரமப்பட்டுள்ளார். அதற்காக சிகிச்சை எடுத்தும் வலி குறையவில்லை.

இந்நிலையில், குடும்ப வறுமையால் பார்வையற்ற தனது பெற்றோர் கடன் வாங்கி இருப்பதால் மன வருத்தத்தில் இருந்த வேளாங்கண்ணி வீட்டில் நேற்று தனியாக இருந்தபோது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள், வேளாங்கண்ணியை காரியாபட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், தனது தந்தைக்கு வேளாங்கண்ணி எழுதிய கடிதத்தை காரியாபட்டி போலீஸார் கைப்பற்றினர். அதில், தனக்கு இடுப்பு வலி அதிகமாக உள்ளதாகவும், சிகிச்சைக்காக கடன் வாங்கி சிரமப்படுவதைத் தவிர்க்க தற்கொலை செய்துகொள்வதாகவும், தன்னை மன்னித்துவிடும்படியும் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்