கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் குளித்தலை நகரச் செயலாளர் சோமுரவி தலைமையில் குளித்தலை அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட பேரவை இணைச் செயலாளர் நாகராஜன் வரவேற்றார்.
இதில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது: கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களிலும், அதிமுக 100 சதவீத வெற்றி பெற்று மாவட்டத்தின் உள்ளாட்சி பதவிகள் அனைத்தையும் கைப்பற்றியது. தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும் மாநில மின்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி, மாவட்டத்திலுள்ள அதிமுக நிர்வாகிகளிடம் பேசி, அவர்களை திமுகவில் வலுக்கட்டாயமாக இணைத்து வருகிறார்.
எனவே, தொண்டர்கள் மற்றும் குளித்தலை தொகுதி நிர்வாகிகள் இதற்கு ஆளாகாமல், வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அடுத்து வரும் மக்களவைத் தேர்தலிலும் கரூர் மாவட்டம் மீண்டும் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
உலகம்
6 hours ago
ஆன்மிகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago