ராஜபாளையம் அருகே இரு பிரிவினரிடையே மோதல் : பெண் உட்பட 2 பேர் படுகாயம்

By செய்திப்பிரிவு

ராஜபாளையம் அருகே இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெண் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

ராஜபாளையம் அருகே கோதைநாச்சியார்புரத்தில் இரு பிரிவினர் இடையே கோயில் மற்றும் நடைபாதைப் பிரச்சினை உள்ளது

நேற்று முன்தினம் இரவு மூன்று பேர் பைக்கில் சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் பிரியங்கா என் பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இதையடுத்து இரு பிரிவினரும் கற்களால் தாக்கிக் கொண்டனர்.

காயமடைந்த பிரியங்காவை பாளையங்கோட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நேற்று காலை மீண்டும் மோதல் ஏற்பட்டதில் ராஜகுரு என்பவர் தாக்கப்பட்டார். அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மோதலால் பதற்றம் ஏற்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீ ஸார் குவிக்கப்பட்டனர். கிராமத்திலிருந்து வெளியே செல்வதற்கும், வெளியிலிருந்து கிராமத்துக்குள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎஸ்பி மாரிராஜ், டிஎஸ்பி ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி கோயில், நடைபாதைப் பிரச்சினையை தீர்ப்பதாக உறுதி அளித்தனர்.

ராஜபாளையம் வடக்கு போலீஸார் ஏழு பேரைக் கைது செய்தனர். தலைமறைவான பலரைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 min ago

தமிழகம்

10 mins ago

இந்தியா

17 mins ago

சுற்றுச்சூழல்

49 mins ago

தமிழகம்

39 mins ago

சினிமா

47 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்