என்.டி.சி. தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும் : பஞ்சாலை தொழிலாளர் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

என்.டி.சி. மில்கள் இயங்கும் வரை தொழிலாளர்கள் அனைவருக்கும் முழுச் சம்பளம் வழங்க வேண்டும் என கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் (ஹெச்.எம்.எஸ்.) கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை சிங்காநல்லூரில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில், சங்கத்தின் தலைவராக 14-வது முறையாக டி.எஸ்.ராஜாமணி தேர்வு செய்யப்பட்டார். பொறுப்பு பொதுச்செயலாளராக மனோகரன், பொருளாளராக சுப்பையன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மத்திய அரசு மூலப்பொருட்களுக்கான முதலீட்டு தொகையை கடனாக கொடுத்து, என்.டி.சி. மில்கள் முழுவதும் இயக்கப்பட வேண்டும். மில்கள் இயங்கும் வரை பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் முழுச் சம்பளம் வழங்க வேண்டும்.

என்.டி.சி. மில்களில் வேலை பழகுநர் தவிர, அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யவேண்டும். கம்பி, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை குறைத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

மேலும்