புதுச்சேரியில் 172 பேருக்கு கரோனா தொற்று : மேலும் ஒருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் புதிதாக 172 பேர் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்ட நிலையில், மேலும் ஒரு வர் உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 6,751 பேருக்கு கரோனா பரிசோ தனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 137, காரைக்காலில் 23, ஏனாமில் 5, மாஹேவில் 7 என மொத்தம் 172 (2.55 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந் தோர் எண்ணிக்கை 1,761 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இது வரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 959 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 192 (96.72 சதவீதம்) பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது மருத்துவமனைகளில் 305, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,701 என மாநிலம் முழுவதும் மொத்தம் 2,006 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 272 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

இதுவரை 13 லட்சத்து 40 ஆயி ரத்து 668 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 51 ஆயிரத்து 363 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதார பணி யாளர்கள், முன்களப் பணி யாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 5 லட்சத்து 25 ஆயிரத்து 1,798 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 272 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்