தொழில் முனைவோர் மாதிரி திட்டம் அறிமுகம் :

By செய்திப்பிரிவு

மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீனவர்கள், மீன் வளர்ப்போர், சுய உதவிக் குழுக்கள், அமைப்புகள், தனி நபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் பயன்பெறலாம். மத்திய- மாநில அரசுகள் மூலம் பொது பிரிவினருக்கு 25 சதவீதம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு 30 சதவீதம் நிதியுதவி வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் வேலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப் பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 31-ம் தேதியாகும். மேலும், விவரங்களுக்கு www.fisheries.gbv.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்