சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி தலைமையில் நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் பட்டா மாற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அதிகாரிகளிடம் ஆட்சியர் விஜயாராணி கூறியதாவது:
அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டால் சரியாக பதிலளிக்க வேண்டும். நிலுவையில் உள்ள மனுக்களை அடுத்த ஆய்வுக் கூட்டத்துக்குள் குறைக்க வேண்டும். வருவாய் கோட்டாட்சியர்கள் ‘வாட்ஸ் அப்’ மூலம் தினசரி முன்னேற்ற அறிக்கைகளை அன்றே பதிவு செய்ய வேண்டும். வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மனுதாரர்களுக்கு தகவல் அனுப்பி, அவர்களை விசாரித்து ஆவணங்களை பெற்று வெள்ளிக்கிழமை அன்று தகுதியானவர்களுக்கு பட்டாக்களை நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர்கள் வழங்க வேண்டும்.
மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குநர் ஆகியோர் அதிக மனுக்கள் நிலுவையில் உள்ள வட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். நிராகரிக்கப்பட்ட பட்டா மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
ஓடிடி களம்
32 mins ago
இந்தியா
41 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago