கோவை காந்திமாநகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் குமார் என்ற லவேந்திரன்(47). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கவிதா(32). ஏற்கெனவே திருமணமாகி கணவரை பிரிந்த கவிதாவுக்கு ஒரு மகன்உள்ளார். கடந்த 12 வருடங்களுக்கு முன்னர், குமாரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒருமகன் உள்ளார். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.
கடந்தவாரம் வீட்டை விட்டுவெளியேறிய கவிதா, தெரிந்தவர் வீட்டில் தங்கினார். பின்னர்,சமாதானமடைந்து நேற்று முன்தினம் கணவர் வீட்டுக்கு வந்தார். அன்று இரவு தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார், கிரிக்கெட் பேட்டை எடுத்து கவிதாவின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் குமார் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். தாக்குதலில் மயக்கமடைந்த கவிதா, அங்கேயே உயிரிழந்தார்.
சரவணம்பட்டி போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குமார் மீது போலீஸார்கொலை வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 mins ago
வணிகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago